ADDED : ஜூன் 12, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், ஜூன் 13
திண்டுக்கல் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் வியாபாரி ஜெயச்சந்திரன் 42. இவர் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாகனத்தில் கொண்டு சென்று சப்ளை செய்கிறார். கிரியம்பட்டி நெடுஞ்சாலையில் ஜெயச்சந்திரனை தாக்கிய நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 ஆயிரம் , அலைபேசியை பறித்துச்சென்றார். வேடசந்துார் எஸ்.ஐ., பாலசுப்பிரமணி சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ததில் மாரம்பாடி பெரிய குளத்துப்பட்டியை சேர்ந்த அருண்குமாரை 36, கைது செய்தார்.
