sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூர் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலம்

/

சிங்கப்பூர் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலம்

சிங்கப்பூர் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலம்

சிங்கப்பூர் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலம்


செப் 23, 2025

Google News

செப் 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கப்பூர் ஆலயங்களில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் நவ ராத்திரி விழா செப்டம்பர் 22ஆம் தேதி வெகு விமரிசையாகத் தொடங்கியது. நவ ராத்திரியின் ஒன்பது நாளும் அம்பிகையை ஒவ்வொரு வடிவத்தில் அலங்கரித்து - அதற்கேற்ற கோலமிட்டு நைவேத்தியம் படைத்து - அந்த நாளுக்குரிய பாடல்கள் பாடி வழிபடுவது வழக்கம்.



இம்மரபுப்படி இவ்வாலயத்திலும் அம்பிகை சர்வ அலங்கார நாயகியாக கொலு வீற்றிருக்க ஆலய மேலாண்மைக் கழகத் தலைவர் சுரேஷ்குமார் சங்கல்பம் ஏற்க அவர்தம் துணைவியார் குத்து விளக்கேற்ற நவராத்திரி விழா கோலாகலமாகத் தொடங்கியது.தலைமை அர்ச்சகர் ஆகம ப்ரவீண நாகராஜ சிவாச்சார்யார் தமக்கே உரிய வெண்கலக் குரலில் “துர்க்கையம்மா.... துர்க்கையம்மா என தவில் பின்னணி இசையுடன் பாட நிரம்பி வழிந்த பக்தர்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் “ ஓம் சக்தி...பராசக்தி “ என முழங்கினர்.



தொடர்ந்து அம்பிகைக்கு ராக - தாள சமர்ப்பணம் செய்யப்பட்டது. வசந்த மண்டபத்தில் அருள் மணமும் கலையரங்கில் இசை மணமும் இப்பகுதியையே பக்தி மயமாக்கின. கலையரங்கில் மெல்லிசை - பக்தி இசை - - நாட்டியத்தில் பரதமும் மற்றவையுமென பல்சுவை அங்கங்களை சிங்கப்பூரின் பிரபல கலைஞர்கள் படைத்து வருகின்றனர். இச்சுவை பெரிதும் பெற்ற பக்தப் பெருமக்களுக்கு அருளமுதோடு அறுசுவை அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது. தலைமை அர்ச்சகர் நவராத்திரி மகிமையை விளக்கியமை பெரிதும் வரவேற்கப்பட்டது. சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்



- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்




Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us