PUBLISHED ON : மே 08, 2026 03:50 PM

சிதையூட்டிய கைகளுடன் தேர்வு எழுதி சிவகங்கை மாணவர் சாதனை!
தமிழகமே ஆவலுடன் காத்திருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், சிவகங்கை சம்பவ்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற மாணவர் ஹர்ஷித் ராஜலிங்கம் 600-க்கு 582 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
ஆனால், இந்த எண்களுக்குப் பின்னால் ஒரு தீரம் மிக்க துயரக் கதை ஒளிந்திருக்கிறது.தேர்வுத் திருவிழா நடந்து கொண்டிருந்த ஒரு நள்ளிரவில், ஹர்ஷித்தின் தந்தை செந்தில் மாரடைப்பால் காலமானார். தந்தை மீது அளவற்ற பாசம் கொண்ட அந்தச் சிறுவனுக்கு உலகம் இருண்டது. அழுது துடித்த ஹர்ஷித்தின் காதுகளில், 'நீ நல்லா படிச்சு பெரிய என்ஜினீயராகணும்' என்று தந்தை அடிக்கடி சொன்ன வார்த்தைகள் மட்டும் ரீங்காரமிட்டன.
-எல்.முருகராஜ்-படம்:சிவகெங்கை மாதவன்
