வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நிரந்தர அமைதி கோரி, ஆயிரக்கணக்கான மக்கள் இம்பாலில் பிரமாண்ட பேரணி நடத்தினர். முதல்வர் வீட்டை நோக்கி செல்ல முயன்ற போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் வன்முறை வெடித்தது.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சிறுவர் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஐஸ் கட்டியில் பதப்படுத்தப்பட்ட பழங்களை உணவாக வழங்கப்படுகிறது. இடம் : கிண்டி
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் குடோனில் தயார் நிலையில் உள்ளது.