திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணேச ராஜா, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு தொண்டர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார். அது சரி எம்ஜிஆர் சிலை எங்கே என்கிறீர்களா? இப்ப அவரா முக்கியம்?
திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கி சிக்கிய எஸ்.ஐ., கலையரசனை கைது செய்து பரிசோதனைக்கு உட்படுத்தும் போது தடயங்களை எஸ்.ஐ., அழிக்க முயன்றதை தடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.,காயமடைந்தார்.
புதுச்சேரியில் தேர்தல் பிரச்சார ரோட் ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வதை முன்னிட்டு அஜந்தா சிக்னலில் டிஐஜி ஷாலினி சிங் தலைமையில் போலீசார் ஆய்வு நடத்தினர்.