மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளதால் நீர்வரத்து இன்றி வறண்டுள்ளது. இடம்: ஆண்டிப்பட்டி, தேனி.
ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வீரப்பன் சத்திரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஒரு வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜையில் முன்னிட்டு உலகத் திருவள்ளுவர் சங்கத்தினர் திருவள்ளுவர் சிலையிலிருந்து மக்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றது.
கோவை ராம்நகர் விவேகானந்தர் சாலையிலுள்ள டாக்டர் ராஜரத்தினம் மருத்துவமனையில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரத்ததான மையத்தை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பார்வையிட்டார்.