வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தின் தங்சுகு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நடந்த வெடிவிபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை தேடும் பணி நடக்கிறது.
சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி சார்பில், நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இடம்: அமைந்தகரை.
தேர்தல் ஆணையம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி இரு சக்கர வாகன பேரணி நடந்தது இடம் : பாலவாக்கம் கடற்கரை
கல்பவிருக்ஷா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் சார்பில், பரதநாட்டிய கலைஞர் தீபா சதாசிவத்தின் மாணவியரின் சலங்கை வந்தனம் எனும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர்.
சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க ஏதுவாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை பேரணி நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரத்தை ஆதரித்து திமுக நகர செயலாளர் அசரப் அலி, சி எஸ் ஐ சர்ச் வளாகத்தில் ஓட்டு சேகரித்தார்.