விண்ணில் தவழும் மேகங்கள் மண்ணிற்கு இடம்மாறியதோ என எண்ணும் வகையில், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நிலவி வரும் கடும் பனி மூட்டத்துக்கு இடையே கங்கை நதியின் மீதுள்ள பாலத்தில் ஊர்ந்து சென்ற ரயில்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிதி சிக்னலில் இருந்து ராஜா தியேட்டர் சிக்னல் வரை நடந்த ரோட் ஷோவில் பிரதமர் மோடி திறந்தவெளி வேனில் பொதுமக்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்த படி வந்தார்.
திருநெல்வேலியில் மாலை முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடத்தில் பகலில் திடீர் மழை பெய்ததால் அங்கு சரல் மண் கொட்டி சரி செய்தனர் அதனால் புழுதி எழுந்தது.
திண்டுக்கல் - சிலுவத்தூர் ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் டூவீலரில் ஆபத்தான முறையில் பொருட்களை கொண்டு செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றது.