sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதிய டி.ஜி.பி., யார்? 26ல் டில்லியில் முடிவு

/

புதிய டி.ஜி.பி., யார்? 26ல் டில்லியில் முடிவு

புதிய டி.ஜி.பி., யார்? 26ல் டில்லியில் முடிவு

புதிய டி.ஜி.பி., யார்? 26ல் டில்லியில் முடிவு

8


ADDED : செப் 16, 2025 06:19 AM

Google News

8

ADDED : செப் 16, 2025 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், வரும் 26ல், டில்லியில் நடக்க உள்ளது.

தமிழக காவல் துறை தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், கடந்த மாதம், 31ல் ஓய்வு பெற்றார். இதையொட்டி, புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பப்படுவது வழக்கம்.

இந்த பட்டியலில் தன்னையும் சேர்க்க வேண்டும் என, டி.ஜி.பி., பிரமோத்குமார், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை காரணமாக கூறி, பட்டியல் அனுப்பாமல், அரசு காலம் தாழ்த்தி வந்தது.

மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியலில் ஜூனியரான வெங்கட்ராமனை பொறுப்பு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக நியமித்து உள்ளது.

இதற்கிடையே, கடந்த ஆக., 29ம் தேதி, சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,க்கான தகுதி பட்டியலை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இப்பட்டியல், இம்மாதம், 1ம் தேதி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அலுவலகத்திற்கு போய் சேர்ந்தது.

இப்பட்டியலில், தமிழக தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், போலீஸ் உயர் பயிற்சியக இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோட் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இவர்கள் மீது, குற்ற வழக்குகள் உள்ளதா, லஞ்ச விவகாரம் உள்ளதா என்றெல்லாம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, தமிழக காவல் துறையின் புதிய தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், டில்லியில் வரும் 26ம் தேதி, யு.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில், தலைமை செயலர், உள்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us