sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது: அண்ணாமலை புகழாரம்

/

தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது: அண்ணாமலை புகழாரம்

தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது: அண்ணாமலை புகழாரம்

தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது: அண்ணாமலை புகழாரம்

68


ADDED : செப் 16, 2025 01:31 PM

Google News

68

ADDED : செப் 16, 2025 01:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது. அவர் பேச்சு பாஜவை பாராட்டும் வகையில் உள்ளது'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில் நடந்த பாஜ மையக் குழு கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: அக்டோபர் முதல் தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். மாவட்டந்தோறும் நிர்வாகிகள் சந்திப்பு, சமுதாய தலைவர்கள் சந்திப்பை நயினார் நாகேந்திரன் மேற்கொள்வார். நாள்தோறும் 3 இடங்களில் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

தினசரி இரண்டு இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்து 3 வது இடத்தில் பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுவார். இபிஎஸ்யின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பாஜ தொண்டர்கள் பங்கேற்று வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது. அவர் பேச்சு பாஜவை பாராட்டும் வகையில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.






      Dinamalar
      Follow us