ADDED : செப் 24, 2025 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : டில்லி சாகேத் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அ.தி.மு.க., அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், அ.தி.மு.க., அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்; சந்தேகத்துக்குரிய எந்த பொருளும் சிக்காததால், புரளி என கூறிவிட்டு போலீசார் சென்றனர்.