sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீசாருக்கு சிறை டாக்டர்கள், எஸ்.பி.,க்கு எதிராக நடவடிக்கைக்கு உத்தரவு

/

மதுரையில் போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீசாருக்கு சிறை டாக்டர்கள், எஸ்.பி.,க்கு எதிராக நடவடிக்கைக்கு உத்தரவு

மதுரையில் போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீசாருக்கு சிறை டாக்டர்கள், எஸ்.பி.,க்கு எதிராக நடவடிக்கைக்கு உத்தரவு

மதுரையில் போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீசாருக்கு சிறை டாக்டர்கள், எஸ்.பி.,க்கு எதிராக நடவடிக்கைக்கு உத்தரவு


ADDED : செப் 27, 2025 05:35 AM

Google News

ADDED : செப் 27, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் போலீஸ் விசாரணையில் சிறுவன் இறந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,உள்ளிட்ட 4 போலீசாருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்.

மதுரை கோச்சடை ஜெயா 2019 ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:ஒருவரது வீட்டில் நகை திருட்டு குறித்து மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசில் 2019 ல் புகார் அளிக்கப்பட்டது. எனது 17 வயது மகனை எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எங்கள் வீட்டில் சோதனையிட்டனர். நகை எதுவும் கிடைக்கவில்லை.

நகை திருடுபோனதற்கு எனது மகன்தான் பொறுப்பு என ஒப்புக்கொள்ளுமாறு அவரை போலீசார் நிர்பந்தித்தனர். அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்து துன்புறுத்தினர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகன் 2019 ஜன.,24ல் இறந்தார்.

போலீசார் கட்டாயப்படுத்தி மகனின் உடலை அடக்கம் செய்ய வைத்தனர். உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

2019 மார்ச் 26 ல் உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு மாற்றி உத்தரவிட்டது.

2023 ஆக.,18 ல் உயர்நீதிமன்றம்,'மனுதாரர் குடும்பம் ரூ.25 லட்சம் இழப்பீடு பெற தகுதி உண்டு. ஏற்கனவே அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. மீதம் ரூ.20 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்,' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கலானது.

2024 செப்.,27 ல் அரசு தரப்பில்,' ரூ.20 லட்சம் கலெக்டர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது,' எனக்கூறி ஆவணம் தாக்கல் செய்தது. இதை பதிவு செய்த உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

நீதிபதி உத்தரவு சிறுவன் மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை 5 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அங்கு சி.பி.சி.ஐ.டி.,போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று பிறப்பித்த உத்தரவு:

சம்பவத்தின்போது எஸ்.எஸ்.காலனி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜா, சிறப்பு எஸ்.ஐ.,-ஆர்.ரவிச்சந்திரன், ஏட்டு எஸ்.ரவிச்சந்திரன், போலீஸ்காரர் சதீஷ்குமார் குற்றவாளிகள் என இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது. சட்டவிரோதமாக தடுத்து வைத்தல் பிரிவின் கீழ் 4 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை, கொலையல்லாத மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் தலா10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இதை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். தலா ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த அருணாச்சலம், எஸ்.ஐ.,க்களாக இருந்த கண்ணன், பிரேம்சந்திரன், மற்றும் விசாரணையில் தெரியவரும் இதர நபர்களை கூடுதல் எதிரிகளாக சேர்த்து உரிய நீதித்துறை நடுவர் (ஜெ.எம்.,) நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கையை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்.

கண்ணன், பிரேம்சந்திரன் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். அருணாச்சலம் பணியில் உள்ளார். விசாரணை பாரபட்சமற்ற முறையில் தொடர, அது முடியும்வரை அவரை

தொடர்ச்சி ௬ம் பக்கம்

மதுரையில் போலீஸ்...

முதல் பக்க தொடர்ச்சி

டி.ஜி.பி., சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

எஸ்.பி., மீது நடவடிக்கை இவ்வழக்கை முதலில் விசாரித்த சி.பி.சி.ஐ.டி.,-எஸ்.பி.,யாக பணிபுரிந்த ராஜேஸ்வரி எதிரிகளுக்கு உதவும் வகையில் விசாரணையை சரியாக மேற்கொள்ளவில்லை. திட்டமிட்டு குறைபாடுகளுடன் செய்துள்ளதால் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை டி.ஜி.பி., மேற்கொள்ள வேண்டும். சிறுவனின் உடலில் இருந்த காயங்களை மறைத்து, வெளிக்காயங்கள் இல்லை என தவறாக குறிப்பிட்டு விபத்து பதிவேடு வழங்கிய மதுரை அரசு மருத்துவமனையில் 2019 ல் டாக்டராக பணிபுரிந்த ஜெயக்குமார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் சட்டவிரோதமாக எஸ்.ஐ.,யிடம் ஒப்படைத்த மருத்துவமனை நிலைய மருத்துவராக பணிபுரிந்த லதாவிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை மருத்துவக் கல்வி இயக்குனர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us