sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல்லில் விட்டு விட்டு பெய்த மழை

/

திண்டுக்கல்லில் விட்டு விட்டு பெய்த மழை

திண்டுக்கல்லில் விட்டு விட்டு பெய்த மழை

திண்டுக்கல்லில் விட்டு விட்டு பெய்த மழை


ADDED : அக் 18, 2025 04:18 AM

Google News

ADDED : அக் 18, 2025 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சில நாட்களாக விட்டு விட்டு தொடர் மழை பெய்கிறது.மாவட்டத்தை பொறுத்தவரையில் 10 நாட்களாக காலையில் வெயில் அடித்தாலும் மதியத்திற்கு மேல் தொடங்கி இரவு வரை பரவலாக மழை பெய்து வருகிறது.

அணைகள், ஆறுகள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8:00 மணிக்கு மேல் லேசான துாரலுடன் மழை பெய்ய சீரான இடைவெளியில் விட்டு விட்டு இரவு வரை மழை நீடித்தது.பெருமழை இல்லாத காரணத்தால் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை. இருப்பினும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

* நத்தம் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. பாப்பாபட்டியை சேர்ந்த பஞ்சு 54, குடிசை வீடு நேற்று இரவு பெய்த மழையில் சேதமடைய உள்பக்க சுவர் இடிந்து விழுந்தது. வீட்டிலிருந்த பொருட்கள் சேதமாகின. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பண்ணுவார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் விசாரணை நடத்தினார்.






      Dinamalar
      Follow us