sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிரம்பி ததும்பும் சோலையாறு: 3 மாதங்களாக மாறாத காட்சி

/

நிரம்பி ததும்பும் சோலையாறு: 3 மாதங்களாக மாறாத காட்சி

நிரம்பி ததும்பும் சோலையாறு: 3 மாதங்களாக மாறாத காட்சி

நிரம்பி ததும்பும் சோலையாறு: 3 மாதங்களாக மாறாத காட்சி


ADDED : செப் 26, 2025 09:11 PM

Google News

ADDED : செப் 26, 2025 09:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:

சோலையாறு அணை எட்டாவது முறையாக நிரம்பியதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறையில் இந்த ஆண்டு கடந்த மே மாதம் முதல் வாரத்தில், தென்மேற்குப் பருவமழை துவங்கி தொடர்ந்து பெய்தது. இதனால், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் சோலையாறு அணை கடந்த ஜூன் மாதம், 26ம் தேதி நடப்பாண்டில் முதல்முறையாக நிரம்பியது.

தொடர்ந்து பெய்த கனமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளும் நிரம்பின. இதனால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சோலையாறு அணை ஏற்கனவே ஏழுமுறை நிரம்பிய நிலையில், தொடர் மழையால் நேற்று எட்டாவது முறையாக நிரம்பியது. இதனையடுத்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் மீண்டும் திறந்துவிடப்பட்டது.

சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 160.62 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 950 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 551 கனஅடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):

சோலையாறு - 54, பரம்பிக்குளம் - 9, வால்பாறை - 29, மேல்நீராறு - 61, கீழ்நீராறு - 37, துாணக்கடவு - 2, பெருவாரிப்பள்ளம் - 3 என்ற அளவில் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us