/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை
/
மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை
ADDED : செப் 26, 2025 09:11 PM
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக, 56 லட்சத்து, 25 ஆயிரத்து, 520 ரூபாய் இருந்தது.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வருகின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப் பட்டுள்ளன.
இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், சலவநாயக்கன்பட்டி பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
தட்டு காணிக்கை உண்டியலில், 18 லட்சத்து, 57 ஆயிரத்து, 756 ரூபாயும், நிரந்தர உண்டியலில், 37 லட்சத்து, 67 ஆயிரத்து, 764 ரூபாய் என, மொத்தம், 56 லட்சத்து, 25 ஆயிரத்து, 520 ரூபாய் இருந்தது.
மேலும், தங்கம் - 129 கிராம், வெள்ளி - 392 கிராமும் இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் முத்துராமலிங்கம், தக்கார் பிரதிநிதி ஆனைமலை சரக ஆய்வாளர் சித்ரா மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.