/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக் மீது வேன் மோதல் பெண் இன்ஸ்பெக்டர் பலி
/
பைக் மீது வேன் மோதல் பெண் இன்ஸ்பெக்டர் பலி
ADDED : செப் 26, 2025 10:50 PM

கோவை:கோவை தெற்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பானுமதி, 52; சிங்காநல்லுார் பாரதிபுரத்தில் கணவர் ராதாகிருஷ்ணன், மகன், மகளுடன் வசித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன், விருதுநகரில் பணியாற்றியதால், வழக்கு தொடர்பாக கோர்ட்டில் சாட்சியளிக்க சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு, அங்கிருந்து பஸ்சில் புறப்பட்டு, அதிகாலை, 4.30 மணிக்கு கோவை வந்தார்.
சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து, அவரது மகன் பைக்கில் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். காமராஜர் சாலையில் சென்றபோது, பின் தொடர்ந்து வந்த வேன் அவர்கள் பைக்கில் மோதியது.
இதில், இருவரும் தடுமாறி விழுந்ததில், பானுமதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.