/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
டேபிள் டென்னிஸ்: சத்யன் ஏமாற்றம்
/
டேபிள் டென்னிஸ்: சத்யன் ஏமாற்றம்
ADDED : செப் 15, 2025 10:43 PM

இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் உலக டேபிள் டென்னிஸ் சார்பில் 'பீடர்' தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இத்தொடரின் 'நம்பர்-3' வீரர் இந்தியாவின் சத்யன், 15வது அந்தஸ்து பெற்ற ரஷ்யாவின் விளாடிமிரை எதிர்கொண்டார். முதல் செட்டை சத்யன் 9-11 என இழந்தார். அடுத்த செட்டிலும் 8-11 என ஏமாற்றினார். அடுத்து நடந்த மூன்றாவது செட்டை 9-11 என நழுவவிட்டார். முடிவில் சத்யன் 0-3 (9-11, 8-11, 9-11) என நேர் செட்டில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பெற்றார்.
மணிகா தோல்வி
பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் மணிகா பத்ரா, 10ம் நிலை வீராங்கனை, துருக்கியின் சிபெல் அல்டின்கயாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-11 என இழந்த மணிகா, அடுத்த செட்டை 12-10 என வென்றார். பின் ஏமாற்றிய இவர், 3, 4வது செட்டுகளை 7-11, 13-11 என கோட்டை விட்டார்.
முடிவில் மணிகா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் ஆகாஷ் பால், பொய்மன்தீ ஜோடி 0-3 என (12-14, 8-11, 4-11) தென் கொரியாவின் கோயகா, ஒகானோ ஜோடியிடம் வீழ்ந்தது.