/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மைக்ரோசாப்ட் ஏ.ஐ., நிறுவனத்துடன் தொழில்நுட்ப பல்கலை., ஒப்பந்தம்
/
மைக்ரோசாப்ட் ஏ.ஐ., நிறுவனத்துடன் தொழில்நுட்ப பல்கலை., ஒப்பந்தம்
மைக்ரோசாப்ட் ஏ.ஐ., நிறுவனத்துடன் தொழில்நுட்ப பல்கலை., ஒப்பந்தம்
மைக்ரோசாப்ட் ஏ.ஐ., நிறுவனத்துடன் தொழில்நுட்ப பல்கலை., ஒப்பந்தம்
ADDED : மார் 31, 2026 11:05 PM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மைக்ரோசாப்ட் ஏ.ஐ., நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட மைக்ரோசாப்ட் ஏ.ஐ., கண்டுபிடிப்பாளர்கள் மையம் ஆகியவற்றுக்கு இடையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் புதுமை கண்டுபிடிப்புகளை கற்றல் மற்றும் சுய சார்பு தொழில் தொடங்க வகை செய்யும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மோகன் முன்னிலையில் மைக்ரோசாப்ட் ஏ.ஐ., புதுமைக்கண்டுபிடிப்பாளர்கள் மையத்தின் சார்பில் ரித்தீஷ் வெங்கட் ஜோஹி மற்றும் பல்கலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர் நித்தியானந்தன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கணிப்பொறித்தலைவர் இளவரசன், கல்வி இயக்குநர் விவேகானந்தன், திட்ட இயக்குநர் செல்வராஜ், டீன்கள் ஸ்ரீநாத், தமிழரசி, மகாதேவன், பேராசிரியர்கள் சாந்தி பாஸ்கரன், மனோகரன், சத்தியமூர்த்தி, தேன்மொழி கலந்து கொண்டனர்.

