sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமர் இல்லம் சாலையில் கூட பள்ளங்கள் உள்ளன: டி.கே. சிவகுமார் கிண்டல்

/

பிரதமர் இல்லம் சாலையில் கூட பள்ளங்கள் உள்ளன: டி.கே. சிவகுமார் கிண்டல்

பிரதமர் இல்லம் சாலையில் கூட பள்ளங்கள் உள்ளன: டி.கே. சிவகுமார் கிண்டல்

பிரதமர் இல்லம் சாலையில் கூட பள்ளங்கள் உள்ளன: டி.கே. சிவகுமார் கிண்டல்

5


ADDED : செப் 23, 2025 12:40 PM

Google News

5

ADDED : செப் 23, 2025 12:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையில் கூட பள்ளங்கள் உள்ளன என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறி உள்ளார்.

பெங்களூரு மாநகரில் சாலைகளில் காணப்படும் பள்ளங்கள், அம்மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல தொழில் அதிபர்கள், தொழில்துறை நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடுமையான விமர்சனங்கள் எழவே, பெங்களூருவில் சாலை பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில், பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையில் கூட பள்ளங்கள் உள்ளன என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறி உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது;

நேற்று நான் டில்லியில் இருந்தேன். பிரதமர் இல்லம் சாலையில் எத்தனை பள்ளங்கள் உள்ளன என்பதை ஊடகங்கள் கவனிக்க வேண்டும்.

மோசமான சாலைகள் என்பது நாடு தழுவிய பிரச்னை. நாட்டின் எல்லா இடங்களிலும் பள்ளங்கள் உள்ளன. நீங்கள் விரும்பினால் நானும் அதை காட்டுகிறேன்.

இந்த பிரச்னைகள் அனைத்து இடங்களிலும் உள்ளன என்பதை பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். அவற்றை மூட நாம் நமது கடமையைச் செய்ய வேண்டும்.

கர்நாடகாவில் மட்டுமே இதுபோல் இருப்பதாக ஊடங்கள் காட்டுகின்றன. பாஜ அரசு சிறப்பாக செயல்பட்டு இருந்தால் சாலைகள் ஏன் இப்படி பள்ளமாக இருக்கும்.

இவ்வாறு டி.கே. சிவகுமார் கூறினார்.






      Dinamalar
      Follow us