தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஹெச்.டி.எப்.சி., வங்கியை பின்னுக்கு தள்ளியது ஏர்டெல்

 ஹெச்.டி.எப்.சி., வங்கியை பின்னுக்கு தள்ளியது ஏர்டெல்

 ஹெச்.டி.எப்.சி., வங்கியை பின்னுக்கு தள்ளியது ஏர்டெல்


UPDATED : மே 19, 2026 01:23 AM

ADDED : மே 19, 2026 01:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2026 01:23 AM ADDED : மே 19, 2026 01:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹெச்.டி.எப்.சி., வங்கி'யை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் இரண்டாவது மதிப்புமிக்க நிறுவனமாக, 'பார்தி ஏர்டெல்' உருவெடுத்துள்ளது.

இந்த காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்துக்கு, ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் சராசரி வருவாய் 245 ரூபாயிலிருந்து 257 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஏர்டெல் இந்தியாவின் வருவாய், ஆண்டு அடிப்படையில் 7.7 சதவீதம் உயர்ந்து, 39,566 கோடி ரூபாயாக உள்ளது. வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சிறந்த வருவாய் ஈட்டல் காரணமாக, மொபைல் சேவை வருவாய் 8.30 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் இடையே இந்நிறுவனத்தின் பங்குகள் 2 சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பங்கின் விலை 1,953.80 ரூபாயாக வர்த்தகமானது. வர்த்தக நிறைவில், 1,938.10 ரூபாய்க்கு முடிந்தது.

Image 1577965


கடந்த வாரத்தில் மட்டும் ஏர்டெல் நிறுவன பங்குகள் 10 சதவீதம் உயர்ந்தன. இதன் காரணமாக, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி ரூபாயை தொட்டது. அதேநேரம், ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் ஒரு சதவீதம் மட்டுமே லாபம் ஈட்டின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us