PUBLISHED ON : ஏப் 21, 2026 01:15 AM

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம ஸ்ரீநிவாசன், சமீபத்தில் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில், 'தமிழ்நாடு வெல்லும்... தமிழ்நாடு போராடும்' என்று சொல்கின்றனர். தி.மு.க.,வுக்கு 30 சதவீதத்துக்கு கீழே தான் ஓட்டுகள் உள்ளன. பல தொகுதிகளில், அவர்கள் தோற்பது உறுதி. தமிழகத்தில், 100 சதவீதம் ஓட்டுகளில், 30 சதவீத ஓட்டுகள் கூட வாங்காத தி.மு.க., மீதமுள்ள, 70 சதவீதத்திற்கும் சேர்த்து நாங்க தான் தமிழ்நாடு என்று பேசினால் என்ன அர்த்தம்?
'நாங்க தான் தி.மு.க., என்று சொல்லுங்கள்; அது சரி... அப்ப நாங்கள்லாம் யாரு... அ.தி.மு.க., யாரு... பா.ஜ., - பா.ம.க., - த.மா.கா., இவங்கள்லாம் யாரு? 'புலிக்கு பயந்தவன் எல்லாம், என்மேல வந்து படுத்துக்கோ'ன்னு சொன்ன மாதிரி, 'தமிழ்நாடு வெல்லும்... தமிழ்நாடு போராடும்னு சொல்றீங்களே' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அதானே, ஆளுங்கட்சியா இருந்துட்டு, யாரை எதிர்த்து போராட போறாங்களாம்...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.

