/

வாராவாரம்

/

பட்டம்

/

ஐவகை நிலம்; ஐவகை உணவு

/

ஐவகை நிலம்; ஐவகை உணவு

ஐவகை நிலம்; ஐவகை உணவு

ஐவகை நிலம்; ஐவகை உணவு


PUBLISHED ON : ஜன 13, 2020

Google News

PUBLISHED ON : ஜன 13, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்டைய தமிழகத்தில், மக்கள் என்ன சாப்பிட்டார்கள்?

ஐந்திணைகள் என்ற பிரிவினையில் அமைந்திருந்த நிலப்பகுதிகளில் மக்கள் வாழ்ந்தார்கள். அங்கே கிடைத்த அல்லது விளைந்த பொருட்களையே உண்டார்கள். அவற்றில் முக்கியமானவை:

குறிஞ்சி (மலை, மலை சார்ந்த இடம்): இவர்கள் வாழ்ந்தது குளிர் பிரதேசம் ஆகையால், திணை, மலைநெல், மூங்கில் அரிசி, கிழங்கு வகைகள் ஆகியவற்றை உண்டார்கள். எ.டு: ஊட்டி, கொடைக்கானல்.

முல்லை (காடு, காடு சார்ந்த இடம்): மரங்கள் நிறைந்த மலையடிவாரப் பகுதியில் வாழ்ந்த இம்மக்கள் வரகு, சாமை போன்றவற்றைப் பயிரிட்டனர். காட்டு விலங்குகளின் இறைச்சியும் இம்மக்களின் உணவாகின. எ.டு: திருப்பத்தூர், நாட்றம்பள்ளி

மருதம் (வயல் மற்றும் வயல் சார்ந்த இடம்): நீர் வளமும் விவசாய அறிவும் அதிகம் பெற்றிருந்த இம்மக்கள், செந்நெல், கரும்பு மற்றும் வெண்ணெலரிசியை உணவாக அதிகம் உண்டனர். எ.டு: தஞ்சை, மதுரை.

நெய்தல் (கடல், கடல் சார்ந்த இடம்): உப்பு வளம் நிறைந்த இந்த இடத்தில் அதைச் சேகரித்து விற்பதால் பெறும் பொருளால் கிடைக்கும் உணவுப்பண்டங்கள், மற்றும் மீனவத் தொழில் மூலம் கிடைக்கும் மீன் முதலான கடல்சார் உயிரினங்களே இவர்கள் உணவு. எ.டு: தூத்துக்குடி, சென்னை.

பாலை (வறண்ட நிலப்பகுதி): விளைச்சலோ, இயற்கை வளங்களோ அதிகமற்ற இப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம், கிடைப்பதைக் கொண்டே அமைந்திருந்தது. (முல்லையும் குறிஞ்சியும் திரிந்த பகுதியே பாலை)

பண்டமாற்று முறையிலும் நெல், உப்பு, தயிர், தேன், போன்றவை பிற நிலங்களுக்குச் சென்றன.

- பவித்ரா ஸ்ரீனிவாசன்