கோடையில் வரும் கண் பிரச்னைகளுக்கு சில தீர்வுகள்...
தற்போது கோடை காலம் என்பதால் உடல் சூடு அதிகரித்து வெப்பநிலை உயரும்.
இதனால் சிலருக்கு கண் அரிப்பு ஏற்படும். இதனால் கண் வீக்கம் ஏற்பட்டு சிவப்பு நிறமாகும்.
குளிர்ந்த நீரில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும்.
அப்படி செய்தும் 3 நாட்களை கடந்து பிரச்னை நீடித்தால் டாக்டரை சந்திக்கவும்.
வெயிலில் செல்வோர் 'கூலிங் கிளாஸ்' அணிந்து கொண்டால் கண் பாதிப்பு ஏற்படாது.
அதிக வெப்பத்தால் புற ஊதா கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படலாம்.
அதில் இருந்து தப்பிக்க பகலில் வெளியே செல்வது, வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.