sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்க அதிபர் சொல்றதை எல்லாம் கேட்க முடியாது: ரஷ்ய அதிபர் மாளிகை காட்டம்

/

அமெரிக்க அதிபர் சொல்றதை எல்லாம் கேட்க முடியாது: ரஷ்ய அதிபர் மாளிகை காட்டம்

அமெரிக்க அதிபர் சொல்றதை எல்லாம் கேட்க முடியாது: ரஷ்ய அதிபர் மாளிகை காட்டம்

அமெரிக்க அதிபர் சொல்றதை எல்லாம் கேட்க முடியாது: ரஷ்ய அதிபர் மாளிகை காட்டம்

3


ADDED : செப் 24, 2025 10:18 PM

Google News

3

ADDED : செப் 24, 2025 10:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ : ரஷ்யாவிடம் இருந்து உக்ரைன் இழந்த அனைத்து இடங்களையும் எளிதாக மீட்கலாம் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதற்கு, ரஷ்ய அதிபர் மாளிகை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்து தொடர்கிறது. 'ரஷ்யா கேட்கும் நிலப் பகுதிகளை விட்டுக் கொடுத்துவிட்டு போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்' என உக்ரைனிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார்.இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா., பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்ட டிரம்ப், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், உக்ரைன் தான் இழந்த நிலப்பகுதிகளை, ஐரோப்பா மற்றும் 'நேட்டோ' எனப்படும் ராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் உதவியுடன் மீட்கலாம் என்று குறிப்பிட்டார்.

டிரம்ப்பின் இந்த கருத்துக்கு, ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: ஐ.நா. பொது சபை அமர்வில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்ததே, டிரம்ப்பின் மாற்றத்திற்குக் காரணம்.

உக்ரைன் உடனான ராணுவ மோதல் தொடர்பான டிரம்பின் அனைத்து கருத்துகளுக்கும் ரஷ்யா உடன்படாது. ரஷ்யாவே, ஒருங்கிணைந்த ஐரோப்பாவின் ஒரு பகுதிதான். அதனால், ரஷ்யாவின் பாதுகாப்பை விலையாகக் கொடுத்து, தங்கள் பாதுகாப்பை ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினர்.






      Dinamalar
      Follow us