sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

லண்டனில் குடியேற்ற எதிர்ப்பு பேரணியில் 1.5 லட்சம் பேர் பங்கேற்பு: 25 பேர் கைது

/

லண்டனில் குடியேற்ற எதிர்ப்பு பேரணியில் 1.5 லட்சம் பேர் பங்கேற்பு: 25 பேர் கைது

லண்டனில் குடியேற்ற எதிர்ப்பு பேரணியில் 1.5 லட்சம் பேர் பங்கேற்பு: 25 பேர் கைது

லண்டனில் குடியேற்ற எதிர்ப்பு பேரணியில் 1.5 லட்சம் பேர் பங்கேற்பு: 25 பேர் கைது

19


UPDATED : செப் 14, 2025 12:11 PM

ADDED : செப் 14, 2025 10:35 AM

Google News

19

UPDATED : செப் 14, 2025 12:11 PM ADDED : செப் 14, 2025 10:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: லண்டனில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பேரணியில் 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த பேரணியில் போலீசாருடன் தள்ளுமுள்ளு நடத்திய 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டது. தற்போது லண்டனில் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது. 1.5 லட்சம் பேர் பேரணியில் பங்கேற்றதால் மொத்த நகரமே குலுங்கியது.

தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் ‛Unite The Kingdom' என்ற பெயரில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது. இந்த குடியேற்ற எதிர்ப்புப் போராட்டத்திற்கு 42 வயதான டாமி ராபின்சன் தலைமை தாங்கினார். பேரணியில் பங்கேற்றவர்கள் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த பேரணியில் போலீசாருடன் தள்ளுமுள்ளு நடத்திய 25 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னும் பலர் குற்றங்களை செய்ததாக, அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆட்சி மாற்றம் கேட்கிறார் எலான் மஸ்க்; அமெரிக்காவில் இல்லை; பிரிட்டனில்...!

பேரணியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசிய எலான் மஸ்க், இடதுசாரி கட்சிகளை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது: வன்முறை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பிரிட்டன் மெதுவாக அழிந்து கொண்டிருக்கிறது. நீங்கள் போராட வேண்டும் அல்லது உயிரிழக்க வேண்டும். அது தான் உண்மை. உடனடியாக பார்லியை கலைத்து விட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும். பிரிட்டனில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.








      Dinamalar
      Follow us