ADDED : மே 19, 2026 03:05 AM

சென்னை:''திரைப்பட டிக்கெட் விற்பனையை, அரசே முன்னின்று நடத்த வேண்டும்,'' என, தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலர் நடிகர் விஷால் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தியேட்டர் 'ஆன்லைன்' டிக்கெட்களை, அரசே நேரடியாக இணையதளம் தொடங்கி, அதன் வாயிலாக விற்பனை செய்ய வேண்டும். இதனால், தனியார் செயலிகள் சார்பில், டிக்கெட்டுக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் தவிர்க்கப்படும்.
திரையரங்கு உரிமை யாளர்களுக்கும், தயாரிப் பாளர்களுக்கும் மற்றும் அரசுக்கும் இடையே வெளிப்படையான கணக்கு வழக்குகளையும் இது உறுதி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் சிவகார்த்தி கேயன் அளித்த பேட்டியில், ''எங்கள் துறையில் இருந்து, விஜய் முதல்வராக வந்துள்ளார். அவர் படங்களில் சிறப்பாக நடிப்பார்; அதேபோல் ஆட்சியையும் சிறப்பாகவே செய்வார்,'' என்றார்.
