உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 18, 2026 09:04 AM

அ நிறம் | அளவு
திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், “தமிழகத்தில் 'சோபா மாடல்' ஆட்சி நடக்கிறது. பிற கட்சியினரையும், பிற கட்சி எம்.எல்.ஏ.,க்களையும் இந்த அரசு தொடர்ந்து, 'பர்ச்சேஸ்' செய்து வருகிறது. சோபா மாடல் ஆட்சிக்கு ஏன் ஓட்டு போட்டோம் என, மக்கள் வருந்துகின்றனர். சோபா மாடல் ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் தி.மு.க., ஆட்சி நிச்சயம் அமையும்” என்றார்.
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேசுகையில், ''இன்று பல அரசியல்வாதிகள் வாய் திறந்து பேசுவதில்லை. என்றைக்கு பேசுவரோ என, காத்திருக்கும் நிலை உள்ளது. அப்படியே அவர்கள் பேசினாலும், பேசாமலேயே இருந்திருக்கலாம் என, நினைக்கும் அளவிற்கு இருக்கிறது,'' என்றார்.
