ADDED : ஜூன் 22, 2025 02:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியாத்தம் : தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை அளித்த பேட்டி:
தமிழகத்தில் இதுவரை 3,000க்கும் அதிகமான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தியதாக தி.மு.க., அரசு கூறுகிறது. அதில் ஒன்றில் கூட, முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட அவர் தெரிவிப்பது இல்லை.
முருகன் மாநாட்டில் அரசியல் பேசப்போவதில்லை. ஆனால், அரசியல் பேசாமலேயே, அரசியல் மாற்றத்தை முருகன் மாநாடு கொண்டு வரும். தீமைகளை ஒழிக்க, சூரசம்ஹாரம் நடந்ததுபோல, தமிழகத்தில் நடக்கும், சமூக விரோத நடவடிக்கைகள் மாய்ந்து போகும் அளவிற்கு, முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்.
இவ்வாறு கூறினார்.