ADDED : ஏப் 03, 2026 06:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்:சட்டசபை தேர்தல் குறித்து தனியார் நிறுவனம் அலைபேசி மூலம் கருத்துக்கணிப்பை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மானாமதுரை(தனி) தொகுதி உட்பட பல தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு அலைபேசி மூலம் அழைப்பு வருகிறது. அதில் பதிவு செய்யப்பட்ட ஒரு குரல், 'நீங்கள் யாருக்கு ஓட்டளிக்க விரும்புகிறீர்கள், அ.தி.மு.க., கூட்டணி என்றால் எண் 1 ஐ அழுத்தவும், தி.மு.க.,கூட்டணிக்கு எண் 2ஐ அழுத்தவும்., த.வெ.க., என்றால் எண் 3ஐ அழுத்தவும் என குறிப்பிடுகின்றனர். எந்த அமைப்பு நடத்தும் கருத்து கணிப்பு என்ற விபரம் கூறப்படவில்லை.

