கடைசியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்: முதலில் வெளிவந்த ரிசல்ட்
கடைசியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்: முதலில் வெளிவந்த ரிசல்ட்
UPDATED : மே 04, 2026 02:19 PM
ADDED : மே 04, 2026 01:27 PM

நமது சிறப்பு நிருபர்
தேர்தலுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணி வைத்த காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அனைத்த தொகுதிகளுக்கும் அக்கட்சி வேட்பாளர்களை அறிவித்தும், மதுரை மாவட்டம் மேலுார் தொகுதி மட்டும் இழுபறியாக இருந்தது.
கட்சிக்குள்ளேயே இருந்த குழப்பத்தால் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் பஞ்சாயத்து டில்லி வரை சென்றது. பின்னர் ஒரு வழியாக அக்கட்சியின் முன்னாள் எம்பி விஸ்வநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதாவது இந்த தேர்தலில் கடைசியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் அவர் தான்.
வெளியூர்க்காரரான இவருக்கும் அங்கு கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இருந்தும் விஸ்வநாதன் விடாமல் பிரசாரம் செய்தார். இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்த போது முதல் முடிவாக மேலுார் தொகுதி அறிவிக்கப்பட்டது. அதாவது கடைசியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் ரிசல்ட் முதலில் வெளிவந்துள்ளது.
மதுரை மேலூர் தொகுதி காங்., வேட்பாளர் விஸ்வநாதன் 58,419 ஓட்டுகள் பெற்று 1058 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
த.வெ.க., வேட்பாளர் மதுரைவீரன் 57,361 ஓட்டு பெற்று இரண்டாம் இடம் பெற்றார். அதிமுக வேட்பாளரான சிட்டிங் எம்எல்ஏ பெரியபுள்ளான் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
