தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது
தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது
ADDED : அக் 30, 2025 06:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கு அவர்களின் பணி மற்றும் செயல்திறன் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்படும். இந்த பதவி உயர்வு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அளிக்கப்படும்.
இந்நிலையில் 2023ம் ஆண்டு தேர்வு பட்டியலின்படி, தமிழகத்தை சேர்ந்த கவிதா, முத்துகுமரன், லீலா அலெக்ஸ், வீரப்பன், ரேவதி ஆகியோருக்கு ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

