உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 15, 2026 07:51 AM

அ நிறம் | அளவு
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லுாரில் ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ அளித்த பேட்டி:
தமிழக வெற்றிக் கழக அரசில் குற்றச்சம்பவங்களில் 48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர்.மின் பிரச்னை குறித்து அரசு உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.
மக்கள் பிரச்னை தொடர்பாக, 12 கோரிக்கைகளை முதல்வர் விஜயிடம் வழங்கினேன். அவற்றின் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளது. முதல்வர் விஜய், பிரதமர் மோடி என, யாரால் மக்களுக்கு நன்மை கிடைக்குமோ அவர்களை சந்திப்பேன்; அதில் அரசியல் பார்க்கவில்லை.
இவ்வாறு கூறினார்.
