உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 13, 2026 07:49 AM

அ நிறம் | அளவு
நமது நிருபர்
அதற்கு பதில் அளித்து கதிரவன் எம்.எல்.ஏ., பேசியதாவது: புள்ளம்பாடி வாய்க்காலுக்கும், ஏரிக்கும் பதினோரு வேறுபாடு உள்ளது. அதை அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர். திட்ட செலவு பெரிய தொகை என்பதால், அரசு அனுமதி இல்லாமல் செய்ய முடியாது.
தாலி கட்டிய உடனே எல்லாம் நடந்துறாது. மெதுவாகத்தான் நடக்கும். உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால செய்ய முடியாது. நீ எனக்கு ஓட்டே போட வேணாம். உன் ஓட்டும் தேவையில்லை. இவ்வாறு பேசினார்.
பேசிவிட்டு, பிரசார வேனை அங்கிருந்து கிளப்பிக் கொண்டு கதிரவன் எம்.எல்.ஏ., சென்று விட்டார். அவர் பேசும்போது, கேள்வி கேட்டவரை நீ, வா, போ என்று ஒருமையில் பேசியதும், தி.மு.க., பிரமுகர் ரவி என்பவரை, டேய் லுாசு என்று மைக்கில் பேசியதும், கிராம மக்களை முகம் சுளிக்க வைத்தது.
