கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்; முதல்வர் பெருமிதம்
கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்; முதல்வர் பெருமிதம்
ADDED : செப் 25, 2025 12:20 PM

சென்னை: தஞ்சை - புதுக்கோட்டையில் அமைந்துள்ள கடற்பசுப் பாதுகாப்பகத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது பெருமையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972ன் அட்டவணை 1ன் கீழ் கடற்பசு இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வாழ்விட இழப்பு காரணமாக எண்ணிக்கையில் மிகவும் குறைந்த அளவிலேயே கடற்பசுக்கள் இருக்கின்றன. எனவே, கடற்பசு இனத்தையும், அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு, 448 சதுர கி.மீ பரப்பளவில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக் விரிகுடாவை கடற்பசு பாதுகாப்பகமாக தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், தஞ்சை - புதுக்கோட்டையில் அமைந்துள்ள கடற்பசுப் பாதுகாப்பகத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது பெருமையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக் வளைகுடாவில், திமுக அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்!
இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம், அபு தாபி பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் உலக பாதுகாப்பு மாநாட்டுக்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சியில் பங்கேற்ற தமிழக வனத்துறை மற்றும ஓம்கார் அறக்கட்டளை உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.