காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் மாற்றம்
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் மாற்றம்
ADDED : மே 11, 2026 02:27 AM

கோவை: காலி மதுபாட்டில்களை வாங்கிய கடைகளில் மட்டுமின்றி, வேறு கடைகளிலும் கொடுத்து, 10 ரூபாய் பெறும் வகையில் திட்டத்தை செயல்படுத்த 'டாஸ்மாக்' பரிசீலித்து வருகிறது.
'டாஸ்மாக்' கடைகளில் மது பாட்டில் வாங்குபவர்கள் குடித்து விட்டு கண்ட இடங்களில் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இதை தடுக்கும் விதமாக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை 'டாஸ்மாக்' நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. மது பாட்டிலில், 'கியூ.ஆர். கோடு' மற்றும் கடை எண் உடன், 10 ரூபாய் 'ஸ்டிக்கர்' ஒட்டி தரப்படுகிறது.
'குடி'மகன்கள் இந்த பாட்டில்களை வாங்கிய கடையிலேயே கொடுத்து, 10 ரூபாயை திரும்ப பெறுகின்றனர். தற்போது கடை எண் இல்லாமலும் ' கியூ.ஆர். கோடுடன் கூடிய ஸ்கேனர் ஒட்டி தரப்படுகிறது.
எதிர்காலத்தில் வேறு டாஸ்மாக் கடைகளிலும் காலி பாட்டிலை திரும்ப கொடுத்து, 10 ரூபாய் பெறும் திட்டத்தை செயல்படுத்த பரிசீலித்து வருவதாக 'டாஸ்மாக்' நிர்வாகம் தெரிவித்துள்ளது.
'க்யூ ஆர் கோடுடன் கூடிய
