ADDED : ஏப் 14, 2026 04:47 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தேர்தல் பணிகளை நவீன தொழில்நுட்ப முறையில் கையாள்வதற்கான பி.ஆர்.ஓ., செயலி குறித்த பயிற்சி வகுப்பு தேர்தல் பொது பார்வையாளர் ரஞ்சித் குமார்லால் தலைமையில் நடந்தது.
இதில் தேர்தல் பிரிவு அரசு அலுவலர்கள், தொழில்நுட்ப பயிற்றுநர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.
