ADDED : ஏப் 02, 2026 05:21 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, திருநகர் மகாலட்சுமி குபேரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 31ம் தேதி காலை 6:00 மணிக்கு விஸ்வரூபம், காலை 8:00 மணிக்கு அலங்கார திருமஞ்சனம், மாலை 4:45 மணிக்கு சீர்வரிசை புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் இரவு 9:00 மணிக்கு பள்ளி அறை சேர்த்தி சேவை நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
