/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி
/
சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி
ADDED : செப் 26, 2025 10:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி:சர்க்கரை ஆலையில் இயந்திரம் வெடித்து சிதறியதில், மெஷின் ஆப்பரேட்டர் இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பாலப்பாடியை சேர்ந்தவர் புருஷோத்தமன், 25. இவர், செம்மேட்டில் தனியார் சர்க்கரை ஆலையில் மெஷின் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார்.
இவர், நேற்று காலை, 8:45 மணியளவில் சர்க்கரையும், மொளாசசையும் பிரித்தெடுக்கும் இயந்திரத்தின் அருகே வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரம் வெடித்தது.
இதில், புருஷோத்தமன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார், விசாரிக்கின்றனர்.