/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய அரசின் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தில்... ரூ.53 கோடி: மாவட்டம் முழுதும் 89 ஆயிரம் விவசாயிகள் பலன்
/
மத்திய அரசின் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தில்... ரூ.53 கோடி: மாவட்டம் முழுதும் 89 ஆயிரம் விவசாயிகள் பலன்
மத்திய அரசின் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தில்... ரூ.53 கோடி: மாவட்டம் முழுதும் 89 ஆயிரம் விவசாயிகள் பலன்
மத்திய அரசின் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தில்... ரூ.53 கோடி: மாவட்டம் முழுதும் 89 ஆயிரம் விவசாயிகள் பலன்
ADDED : செப் 18, 2025 03:42 AM

விழுப்புரம்: மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்படி, நடப்பு ஆண்டு, மாவட்டம் முழுதும் 89 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ.53 கோடியே 40 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியதால், மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம், இந்திய விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக துவங்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவியை நேரடியாக மூன்று சம தவணைகளில் மத்திய அரசு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வழங்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த, 2019ம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களின் பிடியில் சிக்காமல் பாதுகாத்து, விவசாய நடவடிக்கைகளில் தொடர்வதை உறுதி செய்வதோடு, வெளிப்படைத்தன்மையுடன் நேரடிப் பலன் பரிமாற்ற முறையில் நிதி உதவி வழங்கப்படுகிறது.
விவசாய நிலம் வைத்திருக்கும் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச வருமான ஆதரவாக இத்திட்டம் செயல்படுகிறது. பணப்பலன்கள் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகின்றன.
இத்திட்டத்தின்படி, பயனாளியின் பெயரில் நில உடமை (பட்டா) இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒன்றிற்கு மேற்பட்டோர் பயன் பெற இயலாது.
குடும்பத்தில் டாக்டர், பொறியாளர், வழக்கறிஞர், வருமான வரி செலுத்துபவர், அரசு ஊழியர், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இருந்தால், இத்திட்டத்தில் பயன் பெற இயலாது.
திட்டம் அறிவிக்கப்பட்ட கடந்த, 2019ம் ஆண்டு பிப்., 1 ம் தேதிக்கு பிறகு கிரையம் பெற்ற நில உரிமையாளர் இந்த திட்டத்தில் பயன்பெற இயலாது.
மூதாதையர் சொத்தாக இருப்பின் வாரிசு அடிப்படையில் குறிப்பிட்ட தேதிக்கு பிறகு பட்டா மாற்றம் செய்திருந்தாலும், இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.
தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெற தங்கள் பகுதி வேளாண்துறை அலுவலர்களை அணுகலாம்.
பயனாளிகள், இ-சேவை மையம் மூலம் ஆதார் அட்டை நகல், பட்டா நகல், வங்கி பாஸ் புத்தக நகல், கைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்திட வேண்டும்.