sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குளத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி 2 வாலிபர்கள் பலி: மேல்மலையனுாரில் பரிதாபம்

/

குளத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி 2 வாலிபர்கள் பலி: மேல்மலையனுாரில் பரிதாபம்

குளத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி 2 வாலிபர்கள் பலி: மேல்மலையனுாரில் பரிதாபம்

குளத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி 2 வாலிபர்கள் பலி: மேல்மலையனுாரில் பரிதாபம்


ADDED : நவ 03, 2025 06:23 AM

Google News

ADDED : நவ 03, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில், சாலையோர குளத்தின் தடுப்பச்சுவரில் பைக் மோதி, சிறுவன் உட்பட 2 பேர் இறந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த சிறுதலைப்பூண்டியை சேர்ந்தவர் முருகன். வி.ஏ.ஓ., இவர், சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்தார். கருமகாரியம் நேற்று நடந்தது.

இதற்காக நேற்று முன்தினம் இரவு சிறுதலைப்பூண்டி கிராமத்திற்கு வந்த இறந்த முருகனின் உறவினர்களான சிந்தகம்பூண்டியை சேர்ந்த வீராசாமி மகன் நதீஷ், 19; பிரபு மகன் அஸ்விந்த், 16; கள்ளப்புலியூர் ரேணுகுமார் மகன் விஷால், 16; ஆகிய மூவரும் ஸ்பிளண்டர் பைக்கில் மேல்மலையனுார் சென்றனர்.

இரவு 10:00 மணிக்கு மேல்மலையனுார் அக்னி குளம் சாலை வளைவில் வேகமாக வந்த பைக் திரும்பியபோது, நிலை தடுமாறி குளத்தின் தடுப்புச்சுவர் மீது பைக் மோதியது.

விபத்தில் பைக்கை ஓட்டிச்சென்ற நதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அஸ்விந்த் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விஷால் செஞ்சி அரசு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து மேல்மலையனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சாலை வளைவில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. வேகத்தடை அமைத்து எச்சரிக்கை பலகை வைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us