sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

15 லட்சம் நாவல் மரக்கன்று அமைச்சர் சாமிநாதன் தகவல்

/

15 லட்சம் நாவல் மரக்கன்று அமைச்சர் சாமிநாதன் தகவல்

15 லட்சம் நாவல் மரக்கன்று அமைச்சர் சாமிநாதன் தகவல்

15 லட்சம் நாவல் மரக்கன்று அமைச்சர் சாமிநாதன் தகவல்


ADDED : செப் 25, 2025 12:20 AM

Google News

ADDED : செப் 25, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:''நடப்பாண்டில், தமிழகம் முழுவதும், 15 லட்சம் நாவல் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக,'' அமைச்சர் சாமிநாதன் பேசினார்.

தமிழ்நாடு பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு, ஊத்துக்குளி பேரூராட்சி, கதித்தமலை ஸ்ரீ வெற்றி வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன் துவக்கிவைத்தார். கோவில் வளாகத்தில், 50 நாவல் மரக்கன்றுகள் நடப்பட்டன.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:

தமிழக அரசு, மாநில காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவை, வரும் 2030-31ம் ஆண்டுக்குள், புவியியல் பரப்பளவில் தற்போதைய 23.8 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலமாக தமிழ்நாடு பசுமை இயக்கம் தொடங்கப்பட்டது.

பத்து ஆண்டுகளில், 13,500 சதுர கி.மீ., பரப்பளவில் 265 கோடி உள்ளூர் மரக்கன்றுகளை நடவு செய்வது இந்த இயக்கத்தின் நோக்கம். தமிழகம் முழுவதும் இதுவரை, 10.86 கோடி நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. வனத்துறையின் கீழ், 313 நாற்றங்கால்கள், ஐந்து உயர் தொழில்நுட்ப நாற்றங்கால்கள் நிறுவப்பட்டுள்ளன.

கிராமப்புற பல்வகைமையை ஊக்குவிக்கும் வகையில், 88 மரகத பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாவல் மரம், முக்கியமான சூழலியல் மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வனத்துறை சார்பில், 2025-26ம் ஆண்டில், 15 லட்சம் நாவல் நாற்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வகையில், வெற்றி வேலாயுத சுவாமி கோவில் வளாகத்தில் தற்போது, 50 நாவல் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில், வேம்பு, புங்கன், மலைவேம்பு, புளியமரம், மருதம், அசோகமரம், பனை, சொர்க்கமரம் போன்ற மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us