/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிரமம் இல்லாத பயணம்: உறுதிப்படுத்த எதிர்பார்ப்பு!
/
சிரமம் இல்லாத பயணம்: உறுதிப்படுத்த எதிர்பார்ப்பு!
ADDED : செப் 19, 2025 09:46 PM

திருப்பூர்; 'அனுமதிக்கப்பட்ட பஸ் நிறுத்தங்களில் கூட, தனியார் பஸ் ஓட்டுனர்கள் நிறுத்த மறுப்பது, விதிகளுக்கு முரணாணது' என, நுகர்வோர் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
திருப்பூர், பூண்டி, அவிநாசி, தெக்கலுார், கரும்மத்தப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மற்றும் பொது மக்கள், தங்கள் பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு, தனியார் துறை பணியின் மித்தம் தினமும், கோவை சென்று வருகின்றனர்.
திருமுருகன்பூண்டி, அவிநாசி ஆகிய இடங்களில், 'பீக் அவர்ஸ்' எனப்படும் காலை, 7:00 முதல், 9:00 மணி வரை பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக, அவிநாசி பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக மாணவ, மாணவியர், பொதுமக்கள் அலைமோதுவர். திருப்பூர் மட்டுமின்றி சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இருந்து கோவை செல்லும் பஸ்களும், அவிநாசி வந்து செல்லும்; இருப்பினும், அங்கிருந்தே நிரம்பி வழியும் கூட்டத்துடன் வரும் பஸ்களில், மாணவ, மாணவியர், பொது மக்களால் ஏறி செல்ல முடிவதில்லை.
உள்ளூர் பயணமும் அவதி!
இப்பிரச்னை ஒரு புறமிருக்க திருப்பூர், ஈரோடு, சேலத்தில் இருந்து கோவை வரும் பஸ்களில், அவிநாசி, தெக்கலுார் செல்ல வேண்டிய பயணிகளை தவிர்க்கின்றனர். அவிநாசி - சேவூர் வழித்தடத்தில், 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படும் என்று சொல்கின்றனர். ஆனால், '30 நிமிடத்துக்கு மேல் காத்திருந்தாலும், பஸ் வருவதில்லை' என்கின்றனர் பயணிகள். குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக, வால் பிடித்தபடி, பஸ்கள் வரிசையாக வருவதும், அதன் பின் ஒரு மணி நேரம் காத்திருந்தாலும் பஸ்கள் வராமல் இருப்பதுமே இதற்கு காரணம்.