ADDED : பிப் 20, 2026 04:28 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாநகராட்சி 36 வது வார்டில் பணியாற்றும் 30க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
துாய்மை பணியாளர்கள் தங்கள் உடல் நலம் பாதுகாப்பது குறித்த இந்த நிகழ்ச்சியில், திட்ட மேலாளர் கோவிந்தராஜ், துாய்மை பணியாளர்களுக்கான அரசு நலத்திட்டங்கள், பணியிட பாதுகாப்பு குறித்து விளக்கினார். துாய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.
குமரகுரு வேளாண்மை கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள், துாய்மை பணியாளர்களுக்கு உடல் நலம் பாதுகாக்கும் நடைமுறைகள், சத்தான காய்கறி மற்றும் உணவு வகைகள் குறித்தும் விளக்கினர். பாதுகாப்பு உபகரணங்களாக உள்ள முக கவசம், கை மற்றும் கால் உறைகள் அணிவது உள்ளிட்டவை குறித்தும் எடுத்துரைத்தனர்.
