ADDED : ஜூன் 19, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை, ஜூன் 20-
மேலப்பசலை பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் கடந்த 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. பூர்ணாகுதி முடிவடைந்த பின்னர் புனித நீர் அடங்கிய கடங்களுடன் சிவாச்சாரியார்கள் கோயிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது.
