ADDED : டிச 24, 2025 06:46 AM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி பொருளியல் துறை சார்பில் மும்பை ஏ.டி.ஷெரோப் நினைவு அறக்கட்டளை நிதி உதவியுடன் பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் நடந்தன. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார்.
பேராசிரியர்கள் ஷர்மிளா, கணேஷ்பிரபு, லட்சுமண மூர்த்தி நடுவர்களாக இருந்தனர். மாணவி அங்காள ஈஸ்வரி முதல் பரிசு, முத்துமாரி 2ம் பரிசு, மகாலட்சுமி 3ம் பரிசு வென்றனர். பொறியியல் துறை பேராசிரியர்கள் மீனா, சுப்பிரமணியன் ஒருங்கிணைத்தனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கோபாலசந்தர், வித்யா, ஞானசவுந்தரி செய்திருந்தனர்.
