/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழையால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம்
/
மழையால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம்
ADDED : செப் 30, 2025 04:19 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி,சமயநல்லுார் பகுதியில் பெய்து வரும் சமீபத்திய மழையால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் வைகை பெரியாறு கால்வாய் மற்றும் கண்மாய் பாசனத்தில் நெல் அறுவடை பணிகள் முடிந்துள்ளன. கிணறு வசதி உள்ள விவசாயிகள் நிலத்தை உழுது நடவு உள்ளிட்ட பணிகளை துவங்கி உள்ளனர். மேலும் கண்மாய் பாசனத்தை எதிர்பார்த்துள்ள விவசாயிகள் வயல்களில் ஆடு, மாடுகளை கிடை அமர்த்தியுள்ளனர்.
இப்பகுதியில் முகாமிட்டுள்ள கால்நடைகளுக்கு வயலில் காய்ந்த வைகோல் தட்டை, வாய்க்கால் வரப்புகளில் காய்ந்த புற்கள் தீவனமாக கிடைத்தன. இந்நிறையில் சமீபத்திய மழையால் வயல்கள்,வரப்புகளில் புல், செடி, கொடிகள் என பசுமையாக வளர்ந்துள்ளது. இதனால் கால்நடைகளுக்கு அதிகளவில் பசுந்தீவனங்கள் கிடைக்கின்றன.