/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மீனாட்சி பஜாரில் தீ விபத்து; மொபைல் போன் கடைகள் நாசம்
/
மதுரை மீனாட்சி பஜாரில் தீ விபத்து; மொபைல் போன் கடைகள் நாசம்
மதுரை மீனாட்சி பஜாரில் தீ விபத்து; மொபைல் போன் கடைகள் நாசம்
மதுரை மீனாட்சி பஜாரில் தீ விபத்து; மொபைல் போன் கடைகள் நாசம்
ADDED : அக் 02, 2025 07:25 AM

மதுரை: ஆயுத பூஜை முடிந்து விளக்கை அணைக்காமல் சென்றதால் மொபைல் போன் கடையில் தீவிபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்த கடைகளில் தீ பரவியதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.
ஆயுதபூஜையை முன்னிட்டு மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் உள்ள செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் கடைகளில் பூஜைகள் நடத்தப்பட்டது. செல்போன் கடையில் ஆயுத பூஜை முடிந்து விளக்கை அணைக்காமல் மாலை சென்றுள்ளனர்.
இந்நிலையில் விளக்கில் தீயானது காற்றில் பரவ தொடங்கி கடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. பின்னர் தீயானது செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் பரவி வெடிக்க தொடங்கிய நிலையில் தீ மளமளவென பற்றியது.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட போராடி தீயை அணைத்தனர். பின்னர் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் 4 செல்போன் கடைகளில் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்கல் பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.