sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மகன் தள்ளிவிட்டதில் கத்திரிக்கோல் குத்தி போதை தந்தை சாவு

/

மகன் தள்ளிவிட்டதில் கத்திரிக்கோல் குத்தி போதை தந்தை சாவு

மகன் தள்ளிவிட்டதில் கத்திரிக்கோல் குத்தி போதை தந்தை சாவு

மகன் தள்ளிவிட்டதில் கத்திரிக்கோல் குத்தி போதை தந்தை சாவு


ADDED : செப் 26, 2025 10:49 PM

Google News

ADDED : செப் 26, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:போதையில் அடித்த தந்தை, மகன் தள்ளிவிட்டு விழுந்ததில் கத்திரிக்கோல் குத்தி உயிரிழந்தார்.

மதுரை, ஆனையூரை சேர்ந்தவர் கண்ணன், 40; கொத்தனார்; இவரது மனைவி பாரதி, 32. இவர்களுக்கு, 9, 7 வயதில் மகன், 5 வயது மகள் உள்ளனர். கண்ணன் அடிக்கடி குடிபோதையில், மனைவி, பிள்ளைகளை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வந்த கண்ணன், 9 வயது மகன், தம்பி, தங்கையுடன் விளையாடியபோது, கண்ணன் மகனை அடித்தார். அப்போது மகன் தள்ளிவிட்டதில், கண்ணன் நிலைக்குலைந்து விழுந்தார். அங்கிருந்த கத்திரிக்கோல் கண்ணன் தொடையில் குத்தியது. இதில், ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கினார்.

இதையறியாத மகன், 'வழக்கம்போல் போதையில் தந்தை படுத்துள்ளார்' எனக்கருதி மீண்டும் விளையாட ஆரம்பித்தார். பாரதி, கண்ணன் உடலில் இருந்து ரத்தம் வெளியேறியதை கண்டு அதிர்ச்சியடைந்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். வழியிலேயே கண்ணன் இறந்தார். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us