sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

படேல் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு அக்.,31 முதல் நவ., 25 வரை பாதயாத்திரை

/

படேல் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு அக்.,31 முதல் நவ., 25 வரை பாதயாத்திரை

படேல் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு அக்.,31 முதல் நவ., 25 வரை பாதயாத்திரை

படேல் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு அக்.,31 முதல் நவ., 25 வரை பாதயாத்திரை


ADDED : அக் 29, 2025 06:53 AM

Google News

ADDED : அக் 29, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அக்., 31 முதல் நவ., 25 வரை பாதயாத்திரை நடக்க உள்ளதாக மத்திய அரசு இளைஞர் நலத்துறையின் 'மை பாரத்' மாநில இயக்குநர் செந்தில் குமார் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு அக்., 27 முதல் கல்லுாரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இளைஞர்களை நல்ல எண்ணங்கள் உடையவர்களாகவும், தேசபக்தி மிக்கவர்களாகவும் உருவாக்கும் வகையில் தமிழகத்தில் அக்., 31 முதல் நவ., 25 வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கி.மீ., துாரத்திற்கு பாதயாத்திரை நடக்க உள்ளது.

இதற்காக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் தமிழக பிரநிதிகளாக பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் நவ., 8 ல் ரேஸ்கோர்ஸ் மைதானம் முதல் காந்தி மியூசியம் வரை காலை 8:00 மணிக்கு பாதயாத்திரை நடக்கிறது.

மாவட்ட அளவில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் 300 பேருக்கு தேசிய இளைஞர் தினமான ஜன., 12 ல் புதுடில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடியுடன் உரையாடும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. 500 க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொண்டு, 'மை பாரத்' லோகோவுடன் டீ சர்ட் வழங்கி தேசியக்கொடியுடன் பாத யாத்திரை நடத்த உள்ளோம்.

இறுதிக்கட்டமாக குஜராத்தில் நவ., 26 முதல் டிச., 6 வரை 150 கி.மீ., நடைபயணத்துடன் பாதயாத்திரை நிறைவு பெறுகிறது. பாதயாத்திரையில் பங்கேற்க mybharat.gov.in/pages/unity_march என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றார்.






      Dinamalar
      Follow us