/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு தள்ளுபடி விலையில் புத்தகங்களை அள்ளுங்க
/
புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு தள்ளுபடி விலையில் புத்தகங்களை அள்ளுங்க
புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு தள்ளுபடி விலையில் புத்தகங்களை அள்ளுங்க
புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு தள்ளுபடி விலையில் புத்தகங்களை அள்ளுங்க
ADDED : செப் 15, 2025 03:54 AM
மதுரை : மதுரை தமுக்கத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி), பொது நுாலக இயக்ககம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்து வரும் புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.
குளிரூட்டப்பட்ட அரங்கில் 231 ஸ்டால்களில் ஏராளமான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இலக்கியவாதிகள், புத்தகப் பிரியர்கள் என பலரும் கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை அள்ளிச் செல்கின்றனர்.
பபாசி செயலாளர் முருகன் கூறுகையில், ''இதுவரை ரூ.70 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. போட்டித் தேர்வு, நவீன இலக்கியம், குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின.
இம்முறை பள்ளி மாணவர்களின் வருகை அதிகம். வாசிப்புத் திறன் இன்னும் மேம்பட வேண்டும். பரிணாம வளர்ச்சியை ஏற்றுக்கொண்டாலும், அலைபேசியில் படிக்காமல் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும்'' என்றார்.
தள்ளுபடி விலையில் புத்தகங்களை அள்ளிச் செல்ல இன்றே கடைசி வாய்ப்பு. காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிடலாம். அனுமதி இலவசம். வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி, பள்ளி மாணவர்களுக்கு 5 சதவீத கூடுதல் தள்ளுபடி உண்டு.